டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார்.
ஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் சூறையாடப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, 50 படகுகளும், 433 மீனவர்களும் கரை திரும்பவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெருவாரியான மக்கள் வீடுகளை இழந்தும், வாழ்வாதரத்தை இழந்தும் அவதிப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் குடும்பங்கள் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரி பாதிப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஒகி புயல் பாதிப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்துள்ளனர். அத்துடன் தமிழகத்திற்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நிதிகள் குறித்து விவாதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் ஒகி புயல் பாதிப்பிற்கான மத்திய நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்