நடிகை சாயிரா வாசிமுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த மும்பை தொழிலதிபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
அமீர்கான் நடித்த ’தங்கல்’ படத்தில் நடித்தவர் சாயிரா வாசிம் (17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், காஷ்மீரைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்துகொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பின் இருக்கையில் இருந்த நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சாயிரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விவரித்திருந்தார். இது வைரலானது. இந்த சம்பவம் குறித்து ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், சாயிராவிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் மும்பை சாஹர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரித்த போலீசார் விகாஸ் சச்தேவ் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?