கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை அருகிலிருந்த செய்தியாளர்கள் காப்பாற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடிபோதையில் வந்த இளைஞர் தீடீரென பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை மீட்டு, பெட்ரோலையும் தீப்பெட்டியையும் பிடுங்கிக்கொண்டு உடனடியாக ரேஸ் கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, தீக்குளிக்க முயன்றவர் கோவில்பாளையத்தில் வசித்து வரும் செல்வக்குமார் என்பதும், மீன் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.
காந்திபுரத்தில் மதுபான கடையில் குடிக்க சென்ற போது தன்னுடைய 1,500 ரூபாய் பணத்தை சிலர் பிடுங்கி கொண்டதாகவும், இதுதொடர்பாக காந்திபுரம் காவல்நிலையத்திற்கு சென்றால் அங்குள்ள போலீசார் விரட்டுவதாகவும், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றால் உள்ளே விடாமல் போலீசார் விரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், செய்தியாளர்கள் அந்த பகுதியில் இருந்ததால் குடிபோதையில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றினர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!