அடிப்படை வசதிகள் செய்து தராததால் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
குஜராத்தில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடைப்பெற்றது. பாஜக ஆட்சியை தக்க வைக்குமா இல்லை காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றுமா என ஊடகங்கள் பரபரப்பாக விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளது.
மேற்கு குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ளது கஜாதி கிராமம். நேற்று நடைப்பெற்ற தேர்தலில் இந்த கிராமத்தில் இருந்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. குடிநீர் பற்றாகுறை, சாலை வசதிகள் இல்லாதது, சீரான மின் விநியோகம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறும்போது, இக் கிராம மக்களின் பிரதான குறை குடிநீர் பிரச்சனை. அதனால் பைப்லைன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் அது போதாது, மற்றொரு பைப்லைன் வேண்டும் என்று அவர்கள் கூறுவதாக தெரிவித்தனர். அதிகாரிகள் கிராமத்துக்குச் சென்று வாக்களிக்க செல்லும்படி அறிவுறுத்தியும் யாரும் வாக்களிக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!