நடிகர் விஷாலைக் கண்டு நாங்கள் பயப்பட அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த விஷால், தன்னைக் கண்டு ஏன் மற்ற அரசியல் கட்சியினர் பயப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “விஷால் முதலில் கவுன்சிலர் தேர்தலில் நின்று வேட்புமனு தாக்கல் செய்யப் பழகிக்கொண்டு, அதன்பிறகு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விவரமே இல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல் நினைத்துக்கொண்டு ஆர்.கே நகர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவர்கள் அந்தத் தொகுதி நபர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே இருந்தாலும் அழைத்து விசாரிக்கும் போது அவர்கள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்ததை உறுதி செய்யவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை காணவில்லை என விஷால் கூறுவது விளையாட்டான செயலா? என்ற கேள்வியை எழுப்புகிறது. விஷாலை கண்டு நாங்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல” என்று கூறினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்