ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி இருப்பதாக அவரது கணவர் மாதவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுவில் சொத்துகள், வழக்குகள் குறித்து தெரிவிப்பதற்கான படிவம்-26 முழுமையாக நிரப்பப்படாமல் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சூழ்ச்சி இருப்பதாக அவரது கணவர் மாதவன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் சாடியுள்ளார். மேலும் பேசிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு வைஷ்ணவ முறைப்படி திதி கொடுத்ததாகவும், ஜெயலலிதா உயிரிழந்த தினம் உறுதியாக தெரியாத காரணத்தினால் அடக்கம் செய்த நாளில் தான் திதி கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு பின்தான் அதுபற்றி கூறமுடியும் என்றும் மாதவன் தெரிவித்தார்.
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்