ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில்தான் உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வந்துள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கறுப்புச் சட்டையை அணிந்துள்ளனர். அஞ்சலி செலுத்த ஏராளமானோர் மெரினாவில் குவிந்துள்ளதால் அங்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக வந்த ஒரு பெண் இதுகுறித்து கூறும்போது, “ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த நேற்று இரவே பேருந்து மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தோம். இன்று அஞ்சலி செலுத்தியுள்ளோம். ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது” என வேதனையுடன் கூறினார்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!