கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றிருந்தாலும் அதன் தாக்கத்தை சரிசெய்ய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளின் ஓரங்களில் நிற்கும் மின் கம்பங்களும் அப்படியே சரிந்து கிடக்கின்றன. மழையும் தொடர்ச்சியாக பெய்கிறது. இதனால் மக்கள் சிறிது அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். ஒகி புயலின் தாக்கத்தால் 4000-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ள காரணத்தினாலும் பாதுகாப்பு நலன் கருதியும் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை. எனவே செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியாமலும், மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'