இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததையடுத்து, தேவர் தங்க கவசம் உள்ள மதுரை வங்கியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 13.5 கிலோ தங்கத்திலான கிரீடம் மற்றும் கவசம் ஆகியவை தேவர் சிலைக்கு அளிக்கப்பட்டது. இந்த கவசத்தை ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நாளில் அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட அறங்காவலர்கள் வங்கியில் இருந்து பெற்று விழாவிற்கு எடுத்து செல்வது வழக்கம், இந்த ஆண்டு அதிமுக அணிகள் பிரிந்திருந்ததால், கவசத்தையும் கிரீடத்தையும் இரண்டு அணிகளுக்கும் வழங்காமல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் வழங்கியது வங்கி நிர்வாகம்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் ஆணையம் சின்னம், கொடியினை அதிகாரப்பூர்வமாக வழங்கியதை அடுத்து வங்கி கிளையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கையெழுத்திட்ட கடிதத்தை வங்கி மேலாளரிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பிற்கு சின்னம், கொடியினை வழங்கி உள்ளதால் இனிமேல் எந்தவொரு இடையூறும் இல்லை எனவும், கவசம் உள்ள வங்கி கணக்கை அதிமுகவின் பொருளாளர் தொடர்ந்து இயக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்