மியான்மரில் அமைதி மற்றும் சமரசம் ஏற்படுவதற்கு அந்நாட்டு மக்கள் கருவியாக இருக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
மியான்மர் தலைநகர் யாங்கூன் சென்றுள்ள போப் பிரான்சிஸ் திறந்தவெளியில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். இதில் அங்குள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய போப், வன்முறை எண்ணங்களை மறந்து சமரசம் மற்றும் அரவணைப்பு எனும் விதையை மக்கள் பரவலாக தூவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். வன்முறையால் ஏற்பட்ட காயங்களை மறந்து அமைதியை ஏற்படுத்த மக்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்னாத ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், அனைத்து இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் வெளிப்படையாக ரோஹிங்யா இஸ்லாமியர் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ரோஹிங்யா என்ற சொல்லை மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதில்லை. அதை ஏற்கும் வகையிலேயே போப் ஆண்டவரும் நடந்து கொண்டிருப்பதாக அதிருப்தி எழுந்திருக்கிறது. இதற்கு முன் பல முறை ரோஹிங்யா என்ற சொல்லை போப் ஆண்டவர் பயன்படுத்தியிருப்பதையும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் மியான்மர் தலைமை ஆட்சியாளர் ஆங்சான் சூச்சி பேசும்போதும், மியான்மர் இஸ்லாமியர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai