சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மன்னருக்கே அதிக அதிகாரம் உள்ளது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்து வருகின்றனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவரது தலைமையின் கீழ் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக இந்த கமிஷன் செயல்படும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அங்குள்ள ஆடம்பர விடுதியில் காவலில் வைக்கப்பட்டனர். இளவரசர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைது நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு சவுதியின் முக்கிய இளவரசரான மிதெப் பின் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு பெரும் தொகையை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டுள்ளதாக சவுதியை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்