திருவள்ளூரில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அரசு பள்ளியில், தலைமை ஆசிரியையின் உத்தரவின் பேரில் மாணவிகள் வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்தது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஜே.என்.சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும் என கடந்த 24ஆம் தேதி தலைமை ஆசிரியை மணிமேலை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவிகள் சிலர் அழுது கொண்டே, வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டதை அடுத்து, முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில், தலைமையாசிரியர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'