கொடூரமான முறையில் எலியை கொன்ற நபர் : வைரலாகும் வீடியோ

கொடூரமான முறையில் எலியை கொன்ற நபர் : வைரலாகும் வீடியோ
கொடூரமான முறையில் எலியை கொன்ற நபர் : வைரலாகும் வீடியோ

சீனாவில் பிரெட்டை திருடிய எலியை ஒருவர், கொடூரமாக துன்புறுத்திக் கொல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. 

பெய்ஜிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷி. இவர் கடந்த வாரம் கடையில் இருந்து பிரெட் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அந்த பிரெட்டை வீட்டுக்குள் நுழைந்த எலி தின்று தீர்த்துள்ளது. ஆத்திரமடைந்த ஷி, அந்த எலியை குறி வைத்துப் பிடித்துள்ளார். பின்னர் அதை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்திக் கொன்றுள்ளார்.

முதலில் எலியைப் பிடித்த அவர், கயிறு மூலம் அதன் கை மற்றும் கால்களை கட்டி, அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். எலி போதையில் தள்ளாட ஆரம்பித்துள்ளது. அப்போது தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள நினைத்த ஷி எலியை தீயிட்டு கொளுத்தி, ஆத்திரத்தில் திட்டியும் தீர்த்துள்ளார்.  இந்த அளவிற்கு எலிக்கு கொடூர தண்டனை அளித்த அவர், இந்த செயலை குறித்து இணையத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com