ஜிம்பாப்வேயில் மூன்றாவது அதிபராக துணை அதிபர் பதவி வகித்த எம்மர்சன் நங்காவா நாளை பதவியேற்கிறார்.
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 37 ஆண்டுகளாக அதிபராக நீடித்து வந்த முகாபேவின் ஆட்சி அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து, அந்நாட்டின் மூன்றாவது அதிபராக துணை அதிபர் பதவியில் இருந்த எம்மர்சன் நாளை பதவியேற்கிறார். இதனால் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ராணுவம், ஆளுங்கட்சி மற்றும் பொதுமக்களின் நெருக்கடிக்கு பணிந்து தனது அதிபர் பதவியை முகாபே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
அவரது ராஜினாமாவை தொடர்ந்து, ஆளும் ஜானு பிஎஃப் கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அடுத்த அதிபராகவும் எம்மர்சனை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை எம்மர்சன் அதிபர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே சட்டத்தின்படி ஆட்சியில் இருந்து அதிபர் நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக வேறொருவரை 48 மணி நேரத்துக்குள் நியமிக்க முடியும்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி