நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாகூரைச் சேர்ந்த செல்வகுமார், ரவி, மூர்த்தி ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே பைபர் படகில் மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 4 கடற்கொள்ளையர்கள், மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த மீன் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ வலைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடலில் இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதாகவும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com