விடைத்தாள் திருத்தியதில் தவறு செய்ததால் தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் தவறாக மதிப்பீடு செய்தது தெரியவந்ததால் 1,070 ஆசிரியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மறுமதிப்பீட்டின்போது 20க்கும் அதிகமான மதிப்பெண் வித்தியாசம் இருந்தால், முதலில் அந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், மேற்கொண்டு தேர்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது. இதில் மதிப்பெண் வித்தியாசத்தை பொறுத்து தண்டனை வேறுபடுகிறது.
20 முதல் 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஓராண்டு தடையும், 31 முதல் 40 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால் இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 41 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்ததால், விடைத்தாள்களை திருத்திய 273 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வுப் பணிகளில் ஈடுபட அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!