ஆர்.கே.நகர் தொகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்திய நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஓரிரு நாளில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியுடனான சந்திப்பில் தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வார இறுதிக்குள் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகு இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆர்.கே. இடைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கலாம் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ராஜேஷ் லக்கானி டெல்லி செல்ல இருக்கிறார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix