பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை புகைப்படம் எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுரங்காபாத் மற்றும் முஸாபர்புர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு இந்த உத்தரவு பீகார் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத் மற்றும் முஸாபர்புர் மாவட்டங்களில் பொதுவழியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் காலை 5 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஷிப்ட் அடிப்படையில் புகைப்படம் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் புகைப்படம் எடுக்கும்பணியை மேற்பார்வையிட பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோன்று புகைப்படம் எடுத்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளை புகைப்படும் எடுத்தால் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இது எங்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பீகாரில் ஆசியர்களுக்கு தற்போது பாடம் எடுப்பது தவிர மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி