எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 4 பேர், கட்சத்தீவு அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். அதேபோல், அதிகாலையில் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 2 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.
இதில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், இலங்கை கப்பலை விசைப்படகு மூலம் மோதி சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது தமிழக மீனவர்கள் 117 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 164 படகுகளும் சிறைவைக்கப்பட்டுள்ளன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!