சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனைக்கு காரணம் வெளிநோக்கமே, உள்நோக்கமல்ல என கூறினார்.
தினகரன், சசிகலா குடும்பத்தை அச்சுறுத்துவதற்கும் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்குத்தான் இப்படி செய்கிறார்கள்.நான்கு முறை ஆட்சியில் இருந்த போது சோதனை நடத்தாமல் இப்பொழுது ஏன் நடத்த வேண்டும்?சசிகலா குடும்பத்தினரிடம் மட்டும்தான் சொத்துக்கள் உள்ளதா?
சசிகலா குடும்பத்தினர் சொத்துக்கள் சேர்ப்பதற்கு அமைச்சர்கள்தான் வசூலித்து கொடுத்தனர். ஆனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தாமல் சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்துவதுதான் சந்தேகம் அளிக்கிறது.
முதலில் சோதனை நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள். அது போலத்தான் இதுவும் என்றுதான் மக்கள் நினைப்பர்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதுதான் சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்துள்ளனர் என்றும் சீமான் கூறினார். சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்