பலூசிஸ்தான் மாகாண விடுதலைக்காக போராடி வரும் மெஹ்ரான் மர்ரி அவரது குடும்பத்தினருடன் ஸ்விட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், பலூசிஸ்தான் பிரதிநிதியாக அவர் இருந்து வருகிறார். கைது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் அரசு தூண்டுதலின் பேரில், சுரிச் விமான நிலையத்தில் தானும் தனது குடும்பத்தினரும் பல மணி நேரம் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தான் ஸ்விட்சர்லாந்துக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மெஹ்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனக்கு இத்தகைய கதி நேர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் பிடித்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று மெஹ்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து விடுதலை கோரி போராடி வருபவர், பலூசிஸ்தான் மக்கள் இயக்கத்தின் தலைவர் மெஹ்ரான் மர்ரி. அது தொடர்பான ஒரு கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவா சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!