சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், தன்னை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தால் கொன்றதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளிக் கால நண்பர் ஆகாஷ். இந்துஜா மீது ஒருதலைக் காதல் கொண்ட ஆகாஷ், அவரையும் காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஆகாஷின் தொல்லை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. ஆனால் இந்துஜா ஆகாஷின் காதலை ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இந்துஜாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ், அந்தப் பெண் மீதும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது திட்டமிடப்பட்டு செய்த கொலை என காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஆகாஷ் சரணடைந்தார். விசாரணையில், ஆகாஷும், இந்துஜாவும் 5 வருடங்களாக காதலித்ததாக கூறியுள்ளார். தங்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியும் என்றும், தனக்கு நிலையான வேலை இல்லை என்பதால் இந்துஜாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முயன்றதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தியில் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றதாக ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி