கடும் ரகளை காரணமாக சட்டப்பேரவை கூட்டம் முதலில் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவை கூடியதும் மறுபடியும் மூன்று மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று காலை 11 மணியளவில் அவை கூடியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். கூட்டம் மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் திமுக உறுப்பினர்கள் வெளியேற மறுத்தனர். அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்ற முடியாமல் திணறினர். இதனை தொடர்ந்து, அவை மீண்டும் மூன்று மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி