
பிலிப்பைன்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்று கூறினார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31-வது ஆசியான் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மியான்மர், புருனே, பிலிப்பைன்ஸ் உள்பட கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியுடன் சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடியும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிலிப்பைன்ஸ் வாழ் இந்தியர்களிடம் இந்திய அரசின் செயல்பாடுகளை அவர் விளக்கினார். அத்துடன் இந்தியாவில் அனைத்தையும் உலகத் தரத்துக்கு மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் நம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்பதை இந்திய அரசு நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.