அதிமுகவை சார்ந்த மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் கடுமையாக கிண்டல் அடித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் தனக்கு தோன்றியதை எல்லாம் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்று பேசியதை நாளை இல்லை என மறுப்பதும் நேற்று பேசியதை இன்றைக்கு மாற்றி பேசுவதும் அவர்களுக்கு இயல்பான விஷயமாக மாறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக “ஜெயலலிதா எதிர்ப்பின் காரணமாகவே இப்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார். அவர் மறைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இவரது இந்தக் கருத்தை பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இதனை கிண்டலடிக்கும் விதத்தில் பாஜகவை சார்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரையில் நசுங்குகின்ற அளவுக்கு ஏன் வைத்திருந்தார்கள் என்று இப்பதான் புரிகிறது. இந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும் இதுதான். நாக்கில் சனி நடனமாடுகிறார்” என்று விமர்சித்திருக்கிறார்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்