சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், எம்எல்ஏக்கள் முடிவு எடுப்பதற்கு முன் ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போதிலும், முதலமைச்சர் நாளையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏ-க்கள் முடிவு எடுப்பதற்கு முன் ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். எம்எல்ஏக்கள் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டார்கள் என நம்புவதாக கூறியுள்ள அவர், எம்எல்ஏ-க்கள் அரசின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம் என தெரிவித்த அவர், மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான் எனவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கொள்கையை கட்டிக் காத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!