மயிலாடுதுறையில் மர்ம நபர்கள் சிலர், வீட்டின் முன்பு நின்றுக்கொண்டிருந்த மினி பேருந்தை தீ வைத்து எரித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், செந்தில் என்பவர் தனக்கு சொந்தமான மினி பேருந்தை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர், அவரின் பேருந்திற்கு தீ வைத்தனர். வேகமாக பரவி தீ பேருந்தை முற்றிலுமாக எரித்தது. இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த செந்தில் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து தீயில் கருகியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் பேருந்திற்குள் சென்று தீ வைத்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்