சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்காக 81 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 20 முகாம்களில் 2,166 பேர் தங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கட்டளை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதற்கு முன்னதாக, கொடுங்கையூரில் கால்வாய் அடைப்பை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், மீண்டும் அடைப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இரட்டை ஏரி பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தெருக்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பாரத் ராஜீவ்காந்தி நகரில் மருத்துவ முகாமை பார்வையிட்ட முதலமைச்சர், அங்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், சிட்லபாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!