பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதான பனாமா ஊழல் வழக்கு வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நவாஸ் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக நவாஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் அவருக்கு சம்மன்களை அனுப்பியது. பல்வேறு காரணங்களால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த 26ஆம் தேதி ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் நவாஸ் மீது பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புக்கிடையே நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!