சென்னை மாநகராட்சி கட்டடத்தைச் சுற்றி மழை நீர்

சென்னை மாநகராட்சி கட்டடத்தைச் சுற்றி மழை நீர்
சென்னை மாநகராட்சி கட்டடத்தைச் சுற்றி மழை நீர்

மழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி கட்டடத்தை சுற்றியே மழை நீர் சூழ்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் கட்டிடத்தை சுற்றி இரண்டரை அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த கட்டடத்தில் மாநகராட்சி ஆணையரின் அலுவலகம் உள்ளது. தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மாநகராட்சி ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன் அலுவலக பணிக்கு செ‌ல்கின்றனர். மேலும் ஊழியர்களின் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீர் தேங்கியுள்ளதாகவும், நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com