டெல்லி வந்துள்ள இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுமுறைப் பயணமாக இத்தாலி பிரதமர் பாலோ இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பாலோவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இந்திய பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலோ, இந்தியா, இத்தாலி இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என நம்புவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பாலோ, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். பாலோவுடன் அவரது மனைவி எமானுவேலா மரோ உள்ளிட்ட 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இந்தியா வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் இத்தாலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?