கோவை மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் போனில் பேசுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தற்போது 938 தண்டணை கைதிகளும், 800 விசாரணை கைதிகளும், 54 குண்டாஸ் பிரிவு கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச 8 டெலிபோன் பூத் உள்ளன. சிறையிலுள்ள டெலிபோன் மூலம் குடும்பத்தினர், உறவினர்களுடன் பேச விரும்பும் கைதிகள், பேச விரும்பும் நபர்களின் பெயர், அவர்களது தொலைபேசி எண் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகளிடம் அளிப்பர்.
சிறைத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அந்த எண்ணை சரிபார்த்த பிறகு கைதிகள் பேச அனுமதி வழங்கப்படும். ஒரு கைதி மாதத்தில் ஐந்து முறை இதுபோன்று தொலைபேசி மூலம் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது கைதிகள் தங்களது உறவினர்களிடம் ஒவ்வொரு மாதமும் 45 நிமிடம் வரை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு ஏற்ப கோவை மத்திய சிறையிலுள்ள டெலிபோன்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix