அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார். தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால், அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்ல உள்ள நிலையில், சசிகலா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கடந்த 2011-ல் அப்போதைய முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!