கடைமடைக்கு வராத நீர்: களமிறங்கிய விவசாயிகள்

கடைமடைக்கு வராத நீர்: களமிறங்கிய விவசாயிகள்
கடைமடைக்கு வராத நீர்: களமிறங்கிய விவசாயிகள்

சோத்துபாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் பாசனப்பகுதிக்கு வராததால் விவசாயிகளே வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் பாய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தேனி மாவட்டம் பெரியக்குளம் பகுதியில் உள்ள சோத்துபாறை அணையில் இருந்து 2 ஆயிரத்து 865 ஏக்கர் பாசனத்துக்காக அண்மையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் பாயும் கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால், கடைமடை பகுதிவரை தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேரடியாக களமிறங்கிய விவசாயிகள் வாய்க்கால்களில் இருந்துஅடைப்புகளை நீக்கி, தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் பணிகள் முடிந்த நிலையில்,தற்போது கடைமடை வரை தண்ணீர‌ பாயத் தொடங்கியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com