சென்னையில், மத்திய அரசுக் குடியிருப்பை சட்டவிரோதமாக வாடகைக்கு விட்ட ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் குடியிருப்பை சிலர் வாடகைக்கு விடுவதாக எழுந்த தொடர் புகார்களைத் அடுத்து, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் சிபிஐ தனிப்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், சாஸ்திரி பவன் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் சாஸ்திரி பவனில் பணிபுரியும் அலுவலக ஊழியர் திருநாவுக்கரசு, வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு தரகராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix