மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க டோல்-ஃப்ரி எண்கள் அறிவிப்பு

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க டோல்-ஃப்ரி எண்கள் அறிவிப்பு
மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க டோல்-ஃப்ரி எண்கள் அறிவிப்பு

மக்கள் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை, இன்று முதல் செயல்படும் என அறிவித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ந‌டவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், போதுமான நிதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்களான 044-2536 7823, 2538 4965 / 3694 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com