விளையாட்டில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை கோவையைச் சேர்ந்த 4 மூத்த வீராங்கனைகள் நிரூபித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த வசந்தா, பெட்ரிசா, லட்சுமி, சிவகாமி 70 வயதைக் கடந்த மூத்த வீராங்கனைகள். பல காரணங்களால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் முதியவர்களுக்கு மத்தியில், இவர்களின் தடகளப் பயணம் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது. விடாமுயற்சியாலும், விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தாலும் தற்போதும் தடகளத்தில் ஜொலித்து வருகின்றனர். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகளப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும் 16 பதக்கங்களை வென்று வியக்க வைத்தனர்.
தங்களின் சாதனைப் பயணத்திற்கு குடும்பத்தினர் அளிக்கும் உற்சாகமே காரணம் எனக் கூறுகிறார், சர்வதேச தடகளத்தில் இதுவரை 26 பதக்கங்களை வென்ற லட்சுமி. விளையாட்டில் கவனம் செலுத்துவதால், உடல் நலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை என மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டுகிறார் இவர். ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் சாதிக்க அரசு உரிய ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த வீரர், வீராங்கனைகள் முன்வைக்கின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்