கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த திருவாரூர் ரயில் நிலையத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாட்கள் ஈடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் நிர்மல்ராஜ், கொசு உற்பத்தியாகக் காரணமாக இருப்பதாகக் கூறி ரயில் நிலையத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். திருவாரூர் மாவட்டத்தில் சுகாதாரத்தை பேணி காக்காத 1000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை 2 லட்சத்து 54,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?