
கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு சவுதி வர்த்தக விமானம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தரையிறங்கியுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு சதாம் ஹுசைன் குவைத் மீது படை எடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.
அரபு தேசங்களில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில் ஈராக் உடன் நெருங்கிய தொடர்புகளை வைத்து கொள்ள சமீப காலமாக சவுதி அரேபியா முயன்று வருகிறது. 1990-இல் மூடப்பட்ட அரார் பகுதியில் அமைந்திருக்கும் இரு நாடுகள் இடையேயான தரைவழி எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளும் அறிவித்தன.
இந்நிலையில் ஈராக்கிலுள்ள பிற நகரங்களுக்கும் தங்கள் சேவை விரிவுபடுத்தப்படும் என்று நம்புவதாக ஃப்ளைநாஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.