வறுமை காரணமாக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள ஜமீன் இராயபேட்டை போஸ்டர் நகர் வரலட்சுமி தெருவில் ராஜேஷ்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
தம்பதிகள் இருவரும் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திடீரென்று இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தம்பதியினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வறுமையின் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களது இரண்டு மகன்களும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!