கீழடியில் 4 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3 ஆம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளில் மண் கொட்டி மூடப்பட்டது. செப்டம்பர் 30 ஆம் தேதி முடிந்த 3 ஆம் கட்ட ஆய்வில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் தொல்லியல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. கீழடியில் ஆய்வை தொடர வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து 4ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து அகழாய்வு செய்யும் பணி நடைபெறும் என்று கூறியுள்ள அவர் பணி முடிந்ததாக தவறான செய்தி பரப்பப்படுவதாக கூறினார்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்