பெங்களூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றியவரை, வெள்ளைப் புலிகள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ளது பானர்கட்டா உயிரியல் பூங்கா. இங்கு பணியாற்றி வந்தவர் அஞ்சி. வயது 41. இவர் வழக்கம் போல, விலங்குகளுக்கு உணவாக இறைச்சிகளை வைத்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று புலிகள் இருக்கும் பகுதிக்குள் சென்று இறைச்சிகளை வைத்தார். அப்போது புலிகள் அங்கு இல்லை. ஆனால், இரண்டு வெள்ளைப் புலிகள் திடீரென்று பாய்ந்து வந்தது. இதைக் கவனித்த அஞ்சி, வேகமாகத் தப்பி ஓடினார். ஆனால் பாய்ந்து துரத்திய வெள்ளைப் புலியான சவுபாக்யா, அஞ்சியை அடித்துக்கொன்றது. உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் இதே புலிகள், வன பராமரிப்பாளர் ஒருவரைத் தாக்கியது. ஆனால், அவர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அதே போல சமீபத்தில் இங்குள்ள 5 பெங்கால் புலிகள் சேர்ந்து வெள்ளை புலி ஒன்றைக் கொன்றது பரபரப்பானது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!