விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் பதூர் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த வெங்கடேசன், உமா மற்றும் அம்பத்தூரை சேர்ந்த மீனா, ரமேஷ்கண்ணா, சுகுணா, ஓட்டுனர் பிரசாந்த் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களுடன் பயணித்த மற்றொரு பெண் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!