ஆளுநரிடமிருந்து நல்ல தகவல் வரும் என்றும் சசிகலா விரைவில் முதலமைச்சராவார் எனவும் அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுகவை உடைக்க திமுக சூழ்ச்சி வலைகளை பின்னி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னால் இருந்து இயக்குகிறது. அதன்படி தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுக எந்த சூழ்ச்சிக்கும் இரையாகாத ஒரு மகத்தான இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தும் பொதுச் செயலாளர் சசிகலா மிக விரைவில் முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்தார். ஆட்சி அமைப்பதற்கான நல்ல தகவல் ஆளுநரிடமிருந்து மிக விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்த, வைகைச் செல்வன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அரசு விடுதியில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கின்றனர் என்றும் கூறினார்.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!