ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர் அருண் நடராஜன் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் மோசடி நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சிபிஐ முன் ஆஜராக மறுத்துவிட்ட அவர், தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துவிட்டதால் சிபிஐ சம்மன் அனுப்ப முடியாது என்று பதில் கடிதம் அளித்திருந்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சிபிஐ, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது உத்தரவு வரும் வரை, அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்