ஆஸ்திரேலிய வீரர்கள் தனது வழக்கமான பாணியில் இந்திய வீரர்களுடன் வம்பு சண்டை எதுவும் செய்யாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டு கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்து புகழின் உச்சியில் இருந்தது, ஆஸ்திரேலிய அணி. ஆனால் வெற்றிகளுக்கு மட்டுமல்ல Sledging எனப்படும் வம்பு சண்டைக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் பெயர் பெற்றவர்கள். குறிப்பாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியில் இது அதிகமாக இருந்தது. எதிரணி வீரர்களை வம்பு சண்டைக்கு இழுத்து எளிதில் உணர்ச்சிவசப்பட வைத்துவிடுவார்கள்.
இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் தனது வழக்கமான வம்பு சண்டைகள் எதையும் செய்யவில்லை. கேப்டன் விராட் கோலிக்கும், கீப்பர் வேடுக்கும் இடையே மட்டும் லேசான வாய்ச்சண்டை நடைபெற்றது. இதைத் தவிர சொல்லும்படி எதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பு சண்டையில் ஈடுபடாதது குறித்து கருத்து தெரிவித்த சேவாக், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிகப்பெரிய அளவிலான ஐ.பி.எல். போட்டிகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள். இந்திய வீரர்களுடன் அவர்கள் வாய் சண்டையில் ஈடுபட்டால், ஐ.பி.எல். உரிமையாளர்கள் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்க யோசிக்கக் கூடும். இதுதான் இந்திய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணியினர் வாய் சண்டையில் ஈடுபடாததற்கு காரணம் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும். “சிறந்த வீரர்கள் யாரும் தற்போது இல்லாததால் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியில் விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பிஞ்ச் ஆகிய சில வீரர்களை மட்டும் நம்பி உள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்