ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கை ஏற்று, இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே விசாரணை ஆணைய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு விசாரணை ஆணையம் தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த தமிழக அரசு, தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக மனுதாரர் கூறியுள்ளார். விசாரணை ஆணையத்தில் அரசின் தலையீடு இருக்கும் என்பதால், அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்