சசிகலாவின் பரோல் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு தெரியவரும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெங்களூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திப்பதற்காக சசிகலாவுக்கு பரோல் கோரி கர்நாடக சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, " சிறை விதிகளின் படி 6 மாதத்திற்குப் பின் பரோல் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் அதனைக் கோடிட்டுக் காட்டி பரோல் கேட்டு மனு அளித்துள்ளோம். இந்த மனு சிறைத்துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவு தெரியவரும்" என்றார்.
இதனிடையே சசிகலா பரோலில் வந்தால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் சொந்த காரணத்திற்காக பரோல் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!