ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போல் புல்லட் ரயில் திட்டமும் எல்லாவற்றையும் கொல்லும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ரயில்வே துறையானது பயணிகளின் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த செலவிட வேண்டும். புல்லட் ரயில் திட்டத்திற்கு அல்ல. புல்லட் ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கானது அல்ல. மிகப்பெரிய அளவில் வலிமையை காட்டுவதற்கான ஒரு ஈகோ பயணம் தான் அது. புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருமாறு மோடிக்கு பின்னாள் இருந்து யார் அழுத்தம் கொடுத்து வருகிறார். புல்லட் ரயில் திட்டமும் ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போலத்தான். அது பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையும் கொல்லும்” என்று கூறியுள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?