” சிக்காம இருக்க என்னலா செஞ்சிருக்காங்க” - போலீசாரையே கிறுகிறுக்க வைத்த செயின் திருடர்கள்!

” சிக்காம இருக்க என்னலா செஞ்சிருக்காங்க” - போலீசாரையே கிறுகிறுக்க வைத்த செயின் திருடர்கள்!
” சிக்காம இருக்க என்னலா செஞ்சிருக்காங்க” - போலீசாரையே கிறுகிறுக்க வைத்த செயின் திருடர்கள்!

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி என யூ டியூப் பார்த்து விட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே கைதான பரிதாபம்

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் கெருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நான்கு பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாங்காடு தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொள்ளையர்களை பிடிக்க சற்று வித்தியாசமாக போலீசார் முயற்சி செய்தனர். அதுதான் ரிவேர்சில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்கு முக்கிய காரணம் சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அதன் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால்
இரவு நேர காட்சியில் கொள்ளையர்களின் உருவம் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது ரிவர்ஸ் முறையில்
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 600 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரியவந்த நிலையில் மாங்காடு தனிப்படை போலீசார் மதுரவாயல், நெற்குன்றத்தை சேர்ந்த விஜய்(29), அவரது நண்பர் நொளம்பூரை சேர்ந்த படகோட்டி தமிழன்(35), ஆகிய இருவரை கைது செய்தனர். அத்துடன், அவர்களது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பது கடும் சவாலாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “இருவரும் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி, போலீசார் எதனை வைத்து எல்லாம் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை எந்த தடயங்கள் வைத்து எல்லாம் கைது செய்வார்கள் என யூடியூப் பார்த்து அதன் பேரில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பும்போது  மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிகளும் செல்லும்போது உடைகளை மாற்றி கொண்டும் பின்னர் கெருகம்பாக்கத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பிறகு பல்வேறு தெருக்களின் வழியாக சென்று ஓர் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி மீண்டும் உடைகளை மாற்றி கொண்டு மதனந்தபுரம் அருகே சென்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக சென்றுள்ளனர்.

போலீசாருக்கு சவால் விடும் வகையில் உடைகள் மற்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் மாற்றி கொண்டு சென்றால் போலீசாரிடம் சிக்கி கொள்ள மாட்டோம் என யூடியூப் பார்த்து அதன்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அவர்களுக்கு போலீசார் சவால் விடும் வகையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரிவர்சில் பார்க்கும் முறையை கையாண்டு இருவரையும் லாவகமாக கைது செய்துள்ளனர்.

மேலும் இருவரும் யூடியூப் பார்த்துவிட்டு முதல் முறையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான பரிதாபமும் அரங்கேறி உள்ளது. போதைக்கு அடிமையான இருவரும் போதையின் செலவுக்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com